Skip to main content

Posts

Showing posts from November, 2023

அடங்கிப் போனான்

அவன் ஊருக்குள் வாழ்ந்திருந்த காலத்தில் பதுங்குவதில் பூனையைப் போலவும் பாய்வதில் சிறுத்தையைப் போலவும் பிறர்பொருளை கவ்விக் கொள்வதில் காகத்தைப் போலவும் அடுத்தவரை துவசம் செய்வதில் காட்டு யானையைப் போலவும் அன்பு காட்டுவதில் இளந்தூறலைப் போலவும் கோபத்தில் முகம் காட்டுகிற போது கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலவும் மவுனத்தில் சாரைப்பாம்பைப் போலவும் நடமாடித் திரிந்தான் அவன் மரணித்த போது எந்த ஒப்புமையும் தோன்றவில்லை அடங்கிப் போனான் பிரபஞ்சம் எனும் சுருக்கு வலைக்குள்…….