முனைவர் சு. செல்வகுமாரன் தமிழ் உதவிப்பேராசிரியர் (அண்ணாமலைப்பல்கலைக்கழகம்) அரசு கலைக் கல்லூரி பரமக்குடி இலக்கியம் எனும் பெரும் நீரோட்டம் இன்று புத்தகம், இதழ்கள், இணைய இதழ்கள், பிளாக்கர், முகநூல் எனும் வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாக மக்களை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த தளத்துக்கேற்ப வாசகர்களும் வேறுபட்ட சிந்தனைப் போக்குடையவர்களாக விளங்குகின்றனர். மேலும் நவீன தொழில்நுட்ப வசதி இன்று பெரும்பான்மையோரை படைப்பாளிகளாகவும், விமர்சகராகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் தாம் சிந்தித்தவற்றை ஏதோ ஒரு குழுசார்ந்த வாசகத் தளத்திற்கோ, தேவைப்பட்டால் பொது வாசகத்தளத்திற்கோ உடனடியாக கொண்டு சேர்க்கின்ற வாய்ப்பும் அது குறித்த விமர்சனத்தை உடனடியாக பெறுகின்ற வாய்ப்பும் இன்று அதிகமாகவே உள்ளது. அதுபோலவே ஒரு படைப்பாக்கத்தின் ஒரு சில பி...