Skip to main content

Posts

Showing posts from January, 2012

நூல் வெளியீடு

சு.செல்வகுமாரனின் பிரதிகளின் பண்பாட்டு அரசியல் நூலினை சி.சொக்கலிங்கம்(தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயலாளர் ) அவர்கள் வெளியிட பேராசிரியர் முனைவர் வி. வேணுகுமார் பெற்று கொள்கிறார்.

கருமுடியின் கம்பீரம்

ஒவ்வொரு பொழுதும் எனக்குள் இருக்கும் உன்னை அழித்து விடப் பார்க்கிறார்கள். முகம் காட்டியபடியே எனக்குள் நீ எல்லா காலங்களிலும். அப்பாவிடம் முகச்சவரம் செய்த ஊர் இளைஞர்களிடம் முகம் காட்டும் கருமுடியின் கம்பீரத்தோடு

மௌனம்

எதாலும் இட்டு நிரப்ப முடியாத பெருவெளியாய் சிலந்தி வலையில் இளைப்பாற எண்ணிய விட்டில் பூச்சியின் அவஸ்தையாய் நிகழ்ந்திருந்தது உனது மரணம் விஷம் பொருந்திய அந்த கொடிய பொழுதினில் கண் இமைகளுக்குள் சிறகசைத்துப் பறந்து கொண்டிருக்கிறாய் நீ ஓவியக்காரனின் தூரிகையாய் மீளவும் மீளவுமாய் நனைந்தபடி கொலைக்காரர்களின் மனங்களைப் போல அடர்த்தியாய் நிறைந்திருக்கிறது