தத்துவத்தளத்தில் மிக நுட்பமான விமர்சனங்களை முன்வைக்கும் பேராசிரியர் ந.முத்துமோகனின் மார்க்சியக் கட்டுரைகள் (காவ்ய -2007). நூற்றி இருபது கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் சில கட்டுரைகளை குமரி,த.க.இ.பெ., பேரா. நா.வானமாமலை நினைவு 33 வது கலை இலக்கிய முகாமில் கட்டுரை வைக்கும் பொருட்டு வாசிக்க நேரிட்டது. (கட்டுரைகள்-6,9,10,11,14,15,16,17,18,19,20,43,44,46,47,48,49,56,57,63,82,83,102,104,107,109,110) அவை குறித்து இக் கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது. சாதி, மதம், பக்தி, இறை, வைதீகம்,அவைதீகம் சார்ந்த கருத்துருவாக்கங்கள், புனிதம், புனிதமற்றவை போன்ற எதிர்வுகளின் உருவாக்கம், உலகை ஏற்றுக்கொள்ளுதல், மறுத்தல் எனும் தத்துவங்களின் பின்னணி, வட்டாரம் சார்ந்து வேறுபடும் பக்தியின் தன்மை, குருமார்கள், சித்தர்களின் செயல்பாடுகள், சமண, பௌத்த, சைவ, வைணவ சயமங்கள் என ஒவ்வொன்றின் ஊடாகவும் பயணிக்கும் பேராசிரியர் அவர்கள் அவைகளின் சமூகச் செயல்பாடுகள் குறித்து மிக நுட்பமான விவாதங்களை முன்வைக்கின்றார். குறிப்பாக மேற்சுட்டிய நிலைகளில் சமூகத்தை கட்டமைத்தல், கட்டுடைத்தல் அல்லது மறுகட்டமைப்பு செய...