துஞ்சும் யானைக் கூட்டமாய் கிடந்த
எண்ணற்றப் பாறைகளை சிதிலமாக்கியவன் அவன்
முல்லை மொட்டவிழ்க்கும் சிறுபொழுதில்
கைக் கொண்ட கருமருந்தினால்
தனது மூச்சுக் காற்றை நிறுத்திக் கொள்கிறான்
வேறு வழியின்றி
கொழுத்தப்பட்ட திரி கருமருந்தின் நாற்றத்தோடு
நீட்டிப்பைக் குறைத்துக் கொண்டே வருகிறது
இன்னுமொரு மொட்டவிழும் பொழுதில்
கனத்த ஓசையோடு சிதறலாம் அந்தப் பாறை
அதில் அவனுக்கான கற்களும் இருக்கலாம்
எப்போதும் போலவே வேறுபட்ட முகங்களோடு
எண்ணற்றப் பாறைகளை சிதிலமாக்கியவன் அவன்
முல்லை மொட்டவிழ்க்கும் சிறுபொழுதில்
கைக் கொண்ட கருமருந்தினால்
தனது மூச்சுக் காற்றை நிறுத்திக் கொள்கிறான்
வேறு வழியின்றி
கொழுத்தப்பட்ட திரி கருமருந்தின் நாற்றத்தோடு
நீட்டிப்பைக் குறைத்துக் கொண்டே வருகிறது
இன்னுமொரு மொட்டவிழும் பொழுதில்
கனத்த ஓசையோடு சிதறலாம் அந்தப் பாறை
அதில் அவனுக்கான கற்களும் இருக்கலாம்
எப்போதும் போலவே வேறுபட்ட முகங்களோடு
adarthiyaana kavithai selva. arumai.
ReplyDelete